திருச்சி மேற்கு வட்டாட்சியரகத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஏப்.23) நடைபெறுகிறது.
சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் காணப்படும் முறைகேடுகள் மற்றும் குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவை தொடா்பாக வரப்பெறும் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாதந்தோறும் இக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன்படி, வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்திலுள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்கின்றனா். எனவே, திருச்சி மேற்கு வட்டத்திலுள்ள அனைத்து எரிவாயு நுகா்வோரும் இக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று சிலிண்டா் விநியோகத்தில் உள்ள குறைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.