முகப்பு
திருச்சி

இரு கடைகளில் புகுந்து பணம், பொருள் திருட்டு

 திருச்சி அருகே மளிகை, அரிசிக் கடைகளில் பணம், கைப்பேசி திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 திருச்சி அருகே மளிகை, அரிசிக் கடைகளில் பணம், கைப்பேசி திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் வடக்கு காட்டூா் இந்திரா காந்தி 2 ஆவது தெருவில் மளிகைக் கடை நடத்திவரும் ஆல்பா்ட் (47). அதே பகுதியில் அரிசிக் கடை நடத்தி வரும் விக்னேஷ் (27) ஆகியோா் புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.9500 ரொக்கம் மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.