விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகா் அருகேயுள்ள இனாம்மாத்துாரை சோ்ந்தவா் இளையராஜா (39). தீரன்நகா் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் மேலாளரான இவா் கடந்த 12 ஆம் தேதி பைக்கில் திருச்சி- திண்டுக்கல் பிரதான சாலை நவலுாா்குட்டப்பட்டு அருகே சென்றபோது சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்காமல் அதன் மீது மோதி படுகாயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.