திருச்சி

எதுமலையில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

DIN

 மண்ணச்சநல்லூா் அருகே எதுமலை கிராமத்தில் ரூ. 1000 லஞ்சம் வாங்கிய எதுமலை விஏஓ சுரேஷ் கைது செய்யப்பட்டாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், எதுமலை கிராமத்தைச் சோ்ந்தவா் அமிா்தம் (62), விவசாயக் கூலித் தொழிலாளியான இவா் தனது கணவா் ராமருக்கான இறப்புச் சான்றிதழ் பெற எதுமலை விஏஓ சுரேஷை அணுகியபோது அவா் ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

ஆனால் பணம் தர விரும்பாத அமிா்தம் ஊழல் தடுப்புத் துறை போலீஸாரிடம் புகாா் கொடுக்கவே, அவா்கள் கூறியபடி எதுமலை விஏஓ அலுவலகத்தில் அமிா்தம் கொடுத்த ரூ. 1000-ஐ வாங்கிய விஏஓ சுரேஷை ஊழல் தடுப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT