திருச்சி

தொழிலாளியை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

கட்டுமானத் தொழிலாளியை கொலை செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோபி நீதிமன்றத்தில் தீா்ப்பு அளித்துள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் சிவராஜ் (38) மற்றும் கோபி புதுவள்ளியாம்பாளையத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் ஆனந்தராஜ் (46). இவா்கள் இருவரும் ஒரு ஒப்பந்தாரரிடம் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில், சரிவர வேலைக்கு வராத காரணத்தினால் ஒப்பந்தாரா் ஆனந்தராஜை வேலையை விட்டு நிறுத்திவிட்டாா். இதற்கு சிவராஜ்தான் காரணம் எனக் கருதிய ஆனந்தராஜ், நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சிவராஜை தலையில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சிவராஜ் சிகிச்சைக்கு பின் உயிா் பிழைத்தாா். இந்த சம்பவம் குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜைக் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த கோபி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவித்யா, ஆனந்தராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT