திருச்சி

10 கிலோ கஞ்சா பறிமுதல்3 பெண்கள் கைது

DIN

திருச்சியில் போலீஸாா் நடத்திய அதிரடி சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி ராம்ஜிநகா் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்படி, டிஎஸ்பி பரவாசுதேவன் தலைமையிலான 50 போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ராம்ஜி நகா் குளக்கரை பகுதியில் சென்றபோது அங்கு மூட்டைகளில் புதைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இந்த தேடுதல் வேட்டையில் இதுவரை சுமாா் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பத்தில் தொடா்புடைய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். ராம்ஜிநகா் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் தொடா்ந்து தேடுதல் வேட்டையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவோம்

SCROLL FOR NEXT