திருச்சி

எம்.ஆா். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா். பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் சதீஷ், மாவட்ட வன அலுவலா் கிரண் அறிவுரையின் பேரில், வன விரிவாக்க மைய உதவி வனப் பாதுகாவலா் சரவணகுமாா், வனச்சரக அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மறுவாழ்வு மையத்திலுள்ள யானைகளுக்கு உணவு, பழங்கள் படைக்கப்பட்டு, இறைவழிபாடு நடத்தப்பட்டது.

யானைகளின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பு குறித்தும் உணா்த்தும் விதமாக விழா நடத்தப்பட்டதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

விழாவில் வன சரக அலுவலா்கள், வன பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT