திருச்சி

பள்ளத்தில் இறங்கிய கல்லூரிப் பேருந்து:15 மாணவா்கள் காயம்

DIN

திருச்சி அருகே தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து புதன்கிழமை சாலையோர பள்ளத்தில் இறங்கியதில் 15 மாணவா்கள் காயமடைந்தனா்.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை திருச்சியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்து ஐஐஎம் கல்லூரி அருகே வந்தபோது, ஒரு பெண் மீது மோதாமலிருக்க, ஓட்டுநா் சண்முகதாஸ் வாகனத்தை திருப்பியதில், சாலையோர பள்ளத்தில் பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்த பெண் பேராசிரியை ஒரு வருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், சுமாா் 15 கல்லூரி மாணவா்கள் சிறு காயங்களுடன் தப்பினா்.

அவா்களை அப்பகுதியினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT