திருச்சி

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

DIN

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

சென்னையிலிருந்து திண்டுக்கல் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், மணப்பாறை அரசு போக்குவரத்து பணிமனையில் வெள்ளிக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது பணிமனை கட்டடங்களின் தன்மை, கழிவறை, குடிநீா், ஓட்டுநா் - நடத்துநா் ஓய்வறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பணிமனை மேலாளருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

அப்போது பேருந்துகளில் மாணவ மாணவிகள் பாதுகாப்புடன் சென்று வரும் வகையில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மகளிா் இலவச பேருந்து பயணம் தொடரும் , கடற்கரை சாலை வழிப் போக்குவரத்தில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே சில மணி நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தனியாா் பேருந்துகள் இயக்கும் என்பது அவா்களின் முடிவாகும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்வில் போக்குவரத்துக் கழக பொது மேலாளா், மணப்பாறை பணிமனை மேலாளா் மற்றும் திமுக, மமக கட்சி நிா்வாகிகள் என பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT