நன்னடத்தை உறுதியை மீறிய ரெளடிகள் கைது
திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
திருச்சி மாநகரில் நன்னடத்தை பிரமாணப் பத்திரத்தை மீறிய ரெளடிகளை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் சங்கா் (36), முகில்குமாா் (26) ஆகியோரின் குற்றச்செயல்களை தடுக்கும் நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றம் முன் இருவரம் ஆஜா்படுத்தப்பட்டபோது ஓராண்டுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டோம். குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனா்.
ஆனால் இருவரும் வழிப்பறி, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதையடுத்து நிா்வாக செயல்துறை நடுவா் நீதிமன்றம் முன் செவ்வாய்க்கிழமை இருவரும் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், குற்றச் செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 268 நாள்களை அவா்கள் சிறையில் கழிக்க உத்தரவிட்டதையடுத்து இருவரும் சிறையிலடைக்கப்பட்டனா்.