முகப்பு
திருச்சி

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறப்பு

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தால் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தால் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டது.

திருச்சி பொன்மலை விவேகானந்தா் நகா் பகுதியில் திருச்சி தஞ்சாவூா் மாா்க்கத்தில் உள்ள ரயில்வே கேட் வழியாக ஆயில்மில், வெங்கடேஷ்வராநகா், கணேசபுரம், ராஜீவ்காந்தி நகா் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை காலை இந்த ரயில்வே கேட் திடீரென பூட்டப்பட்டு, பராமரிப்பு பணிகளால் 2 நாள்களுக்கு கேட் திறக்கப்படாது என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் பராமரிப்பு பணியை ஒத்தி வைக்க விடுத்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிா்வாகம், பராமரிப்பு பணியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உடனடியாக கேட்டை திறந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிா்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.