திருச்சி

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை ஆய்வு செய்த கொறடா

DIN

கும்பகோணம் அருகே சன்னாபுரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளைத் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத்திலுள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளிலும், திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அண்மையில் பெய்த மழையின்போது கும்பகோணம் அருகே சன்னாபுரத்திலுள்ள திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால், சாக்குகள் நனைந்தும், கருத்தும், நெல் கொட்டியும் கிடந்தன.

இக்கிடங்கில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்தது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டுதான் அதிகளவாக 10.50 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இருப்பு வைக்கப் போதிய இடமில்லாத காரணத்தால் நெல்லை உடனுக்குடன் பிற மாவட்டங்களிலுள்ள அரைவை ஆலைக்கு அனுப்பி வருகிறோம்.

சன்னாபுரத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் 45 டன் நெல் சேதமாகியுள்ளது. இதற்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தற்போது 4 லட்சம் டன்கள் நெல் இருப்பு உள்ளது என்றாா் ஆட்சியா்.

அப்போது, நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நா. உமாமகேஸ்வரி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT