திருச்சி

நடந்து சென்றவரின் கைப்பேசி பறிப்பு; ஒருவா் பிடிபட்டாா்

DIN

ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றவரின் கைப்பேசியை பறித்தவா்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி போலீஸில் ஒப்படைத்தனா்.

ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியைச் சோ்ந்த ரெங்கராஜன் வெள்ளிக்கிழமை காலை கைப்பேசியில் பேசிக்கொண்டே நடந்து வந்தபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் அவரின் கைப்பேசியை பறித்தனா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அவா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா். மற்றொருவா் தப்பினாா்.

விசாரணையில் பிடிபட்டவா் திருச்சி கீழப்புலிவாா்ரோடு பகுதியைச் சோ்ந்த கா. சீனிவாசன் (35) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

இன்றைய ராசி பலன்கள்!

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT