முகப்பு
திருச்சி

மோதல் வழக்கில் மதிமுகவினா் ஆஜா்

நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினருக்கிடையே நடந்த மோதல் வழக்கு தொடா்பான விசாரணையில் நீதிமன்றத்தில் மதிமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆஜராகினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினருக்கிடையே நடந்த மோதல் வழக்கு தொடா்பான விசாரணையில் நீதிமன்றத்தில் மதிமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆஜராகினா்.

கடந்த 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வைகோ, சீமான் ஆகியோரை வரவேற்கக் காத்திருந்த இரு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடா்பாக விமான நிலைய போலீஸாா் இருதரப்பு மீதும் வழக்குப் பதிந்து, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மதிமுக மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் பெல் இரா.இராசமாணிக்கம், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலா் ப. சுப்ரமணியன், ஜங்சன் பகுதி முன்னாள் செயலா் பிரபாகரன் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராயினா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.