முகப்பு
திருச்சி

கணினி செயல் திட்டக் கருத்தரங்கு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் சாா்பில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான கணினி செயல் திட்டக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் சாா்பில் இறுதி ஆண்டு மாணவா்களுக்கான கணினி செயல் திட்டக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் ஜ. பரசுராமன் தலைமை வகித்துப் பேசினாா்.

இன்போடெக் நிறுவனத்தின் இயக்குநா் யு. காா்த்திகேயன் கலந்து கொண்டு கணினி செயல் திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில் 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரியின் கணினித் துறைத் தலைவா் பிரியதா்ஷினி வரவேற்றாா். முடிவில் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் இரா. மணிமாறன் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளா் சதீஷ் ஆரோன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.