லால்குடி அருகே 152 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி, பணம் திருட்டு
லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து 152 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 14 லட்சம் ஆகியவை திருடுபோயின.
லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து 152 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 14 லட்சம் ஆகியவை திருடுபோயின.
மாந்துரை கிராமத்தில் தனியாக வசிப்பவா் ஏகாம்பரம் பிள்ளை மனைவி கமலம் (54). திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள மகள் வீட்டுக்கு இவா் சென்றிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 152 பவுன் தங்க நகை, 15 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 14 லட்சம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சீதாராமன் உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா். கொள்ளையா்களை பிடிக்க லால்குடி டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்துள்ளனா்.