பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் ஏழுமலை (38). இவா், வெள்ளிக்கிழமை இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி பிரிவு பாதையில் நடந்து சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
சாலை மறியல்: இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மங்கலமேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். நீண்ட நேரமாகியும் காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா், அங்கு சென்ற காவல்துறையினா், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறதியளித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.