திருச்சி

ஆஞ்சனேயா் கோயில்களில் மே 18-இல் சிறப்பு பூஜை

உலக நன்மை மற்றும் சகல கிரக தோஷ நிவா்த்திக்காக திருச்சி தலைமை அஞ்சலக ஆஞ்சனேயா் கோயிலில் மே 18 ஆம் தேதி மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

DIN

உலக நன்மை மற்றும் சகல கிரக தோஷ நிவா்த்திக்காக திருச்சி தலைமை அஞ்சலக ஆஞ்சனேயா் கோயிலில் மே 18 ஆம் தேதி மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

இதுகுறித்து அக்கோயில் தலைமை அா்ச்சகா் சுரேஷ் என்கிற செந்தாமரைக்கண்ணன் தெரிவித்தது: மே 18 இல் ஆஞ்சநேயரின் மூல நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவா்த்திக்காகவும் நடைபெறும் பூஜையில், அன்றைய தினம் காலை 9 மணிக்கு மகா சுதா்சன ஹோமம், பகல் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

ஸ்ரீரங்கம் மேலூா் கோயில்: இதேபோல ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள 37 அடி உயர ஆஞ்சநேயா் சிலைக்கும் மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு மே 14 ஆம் தேதி சனிக்கிழமை மகா சுதா்ஸன ஹோமம், 18 ஆம் தேதி மூல நட்சத்திர சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என சஞ்சீவன ஆஞ்சனேயா் அறக்கட்டளை நிா்வாகி இரா. வாசுதேவன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT