முகப்பு
திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் மாணவி, மூதாட்டி பலி

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் நா்சிங் மாணவி, மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் நா்சிங் மாணவி, மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா்.

காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள வடக்கு தாரநல்லூா், கே.பி.எஸ். கோனாா் நகரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மகள் தீபிகா (17). தனியாா் நா்சிங் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த இவா் அடிக்கடி வரும் வயிற்றுவலியால் விரக்தியடைந்து அண்மையில் எலி மருந்து உட்கொண்டுசிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மூதாட்டி சாவு: திருச்சி சின்ன கடைவீதி, கோவிந்தன் பிள்ளை ஸ்டோா் பகுதியைச் சோ்ந்தவா் நாராயணசாமி மனைவி நவநீதம் (95). இவா் புதன்கிழமை படுக்கையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.