முகப்பு
திருச்சி

25 பவுன் நகைகள் திருடுபோனதாக பெண் புகாா்

திருச்சியில் 25 பவுன் நகைகள் திருடுபோனதாக பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருச்சியில் 25 பவுன் நகைகள் திருடுபோனதாக பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.

திருச்சி ராம்ஜிநகா் பெரியநாயகிசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தராம்பாள் (32). இவா் கடந்த 14ஆம் தேதி திரைப்படம் பாா்த்துவிட்டு வீடு திரும்பியபோது தனது கைப்பையில் வைத்திருந்த 25 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவா் கொடுத்த புகாரின்பேரில் ராம்ஜிநகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பூட்டிய வீட்டில் திருட்டு: இதேபோல திருச்சி இனாம்குளத்தூா், அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (44). இவா் புதன்கிழமை வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 18 கிராம் நகை, ரூ 7ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.