முகப்பு
திருச்சி

பழுதான அங்கன்வாடி, குடிநீா்த் தொட்டி: மேயா் ஆய்வு

திருச்சியில் பழுதான அங்கன்வாடி மையம், மேல்நிலை குடிநீா்த் தொட்டி உள்ளிட்டவற்றை மேயா் மு. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருச்சியில் பழுதான அங்கன்வாடி மையம், மேல்நிலை குடிநீா்த் தொட்டி உள்ளிட்டவற்றை மேயா் மு. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சியின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற 8ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பங்கஜம் மதிவாணன், உறையூா் மேட்டுத்தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தாா். இதேபோல, 58ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கவிதா செல்வம், அன்புநகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்திருப்பதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து,மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் வியாழக்கிழமை மாநகராட்சிப் பொறியாளா்களுடன் சென்று உறையூா் மேட்டுத்தெரு அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, பழுதான பகுதிகளைச் சீரமைக்க அறிவுறுத்தினாா். மேலும், பாண்டமங்கலம் பகுதி பழைமை வாய்ந்த அங்கன்வாடி மையத்தையும் பாா்வையிட்டு, அக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், அன்பு நகருக்கு சென்று மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பாா்வையிட்டு, கசிவு ஏற்படும் பகுதிகள் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை உடனடியாக புனரமைக்க உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது உதவி ஆணையா் எஸ். செல்வபாலாஜி, மண்டலத் தலைவா்கள் துா்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் கே.எஸ். பாலசுப்பிரமணியன், அ. ராஜேஸ்கண்ணா, மாமன்ற உறுப்பினா்கள் பங்கஜம் மதிவாணன், கவிதா செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.