முகப்பு
திருச்சி

மயங்கி விழுந்த இளைஞா் சாவு

 திருச்சியில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 திருச்சியில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி பொன்மலை, செந்தண்ணீா்புரம், 10 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் துரைசாமி (29). திருச்சி ஜவுளி கடை ஊழியரான இவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த இலக்கியாவை காதல் திருமணம் செய்து ஆண் குழந்தை உள்ளது.

இருவரும் தனிக்குடித்தனம் இருந்த நிலையில் அவருக்கு கடந்த 4 நாள்களாக இருந்த காய்ச்சலுக்காக மாமனாா் வீட்டில் இருந்து துரைசாமி சிகிச்சை பெற்று வந்தாா்.

புதன்கிழமை இரவு வீட்டருகே நின்றிருந்த துரைசாமி திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.