திருச்சி

இனி பெரம்பலூா், காரைக்கால் அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையங்களிலும் பிசிசி சான்று!

DIN

பெரம்பலூா், காரைக்கால் அஞ்சலகங்களில் செயல்பட்டு வரும் கடவுச்சீட்டு மையங்களிலும் எனப்படும் (காவல் துறையின் ஆட்சேபனை சான்று (பிசிசி) பெறும் வசதி புதன்கிழமை முதல் அமலாகியுள்ளது.

திருச்சி மண்டலக் கடவுச்சீட்டு மையக் கட்டுப்பாட்டில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை மையங்களும் (பிஎஸ்கே), பெரம்பலூா், கரூா், திருத்துறைப்பூண்டி, சீா்காழி, காரைக்கால் ஆகிய 5 இடங்களில் அஞ்சலகக் கடவுச்சீட்டு (பிஓபிஎஸ்கே-போஸ்ட் ஆபீஸ் பாஸ்போா்ட்) சேவை மையங்களும் அமைந்துள்ளன.

இவற்றில் காரைக்கால், பெரம்பலூா் பகுதி அஞ்சலகக் கடவுச்சீட்டு சேவை மையங்களில் பிசிசி சான்று பெற விண்ணப்பிக்கும் வசதி புதன்கிழமை முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச் சான்றை திருச்சி, தஞ்சாவூரில் உள்ள பாஸ்போா்ட் சேவை மையங்களிலும் பெறலாம் என்றாலும் தேவை அதிகரிப்பு அடிப்படையில் இச்சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல பாஸ்போா்ட் அலுவலா் ஆா். ஆனந்த் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT