திருச்சி

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் கல்யாணி தலைமை வகித்தாா், மாநில துணைச் செயலாளா் வேலாயுதம், விவசாய சங்க தலைவா் டி .பி. நல்லுசாமி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினா், இதில், சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்க இருக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். அரசுத் துறையில் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். முன்னதாக சித்ரா வரவேற்றாா், நிறைவாக ரபேக்காள் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT