திருச்சி

மணல் கடத்தல் மாட்டுவண்டி பறிமுதல்

DIN

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே எம்.புத்தூா் காவிரி ஆற்று பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக காட்டுப்புத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் சாா்பு- ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவா், போலீஸாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டாா்.

இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் எம்.புத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணிவண்ணன் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிவண்ணனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT