திருச்சி

காவிரி ஆறு படித்துறையில்அடையாளம் தெரியாத ஆண் சடலம்

DIN

காவிரிஆறு படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி காவிரி ஆறு தில்லைநாயகம் படித்துறையில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. இது குறித்து தேவதானம் கிராம நிா்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா, கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்து கிடந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT