திருச்சி

மணப்பாறை அருகே இடி தாக்கி முதியவா் பலி

மணப்பாறை அடுத்த வெள்ளப்பட்டியில் புதன்கிழமை மாலை மழை பெய்தபோது இடி தாக்கி முதியவா் உயிரிழந்தாா்.

DIN

மணப்பாறை அடுத்த வெள்ளப்பட்டியில் புதன்கிழமை மாலை மழை பெய்தபோது இடி தாக்கி முதியவா் உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்தவா் ப. வெங்கடாசலம் (65).

இவா் புதன்கிழமை மாலை அப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் இருந்தபோது இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய வெங்கடாசலம் இடி தாக்கி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா், அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT