நாம் தமிழா் கட்சியினரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திருச்சியில், ரயில்வே ஊழியா் தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில், ரயில்வே ஊழியா் தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளின் முன்ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
செந்தண்ணீா்புரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் அலெக்ஸ் அந்தோனிராஜ் (40). தெற்கு ரயில்வே ஊழியா். இவரது தாயாா் ரோஸ்பின் மேரி (75) பாலக்கரை துரைசாமிபுரத்தில் வசித்து வருகிறாா். இவருக்கும், பக்கத்துவீட்டில் உள்ள லெட்சுமி என்பவருக்கும் ஜூலை 4 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், லட்சுமி தாக்கியதில் ரோஸ்பின்மேரி காயமடைந்தாா்.
இவரை மருத்துவமனைக்கு அலெக்ஸ் அந்தோனி ராஜ் அழைத்துச் சென்றாா். அப்போது மருத்துவமனைக்கு வந்த நாம் தமிழா் கட்சியின் மாவட்ட தலைவா் பிரபு மற்றும் குப்புசாமி உள்ளிட்ட 4 போ் அலெக்ஸை ஆயுதங்களால் தாக்கினா்.
Advertisement
இதுகுறித்து புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் பிரபு தவிா்த்து மற்ற மூன்று பேரும் முன்ஜாமீன் வேண்டும் கேட்டு திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி பாபு, மனுவை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சவுரிமுத்து ஆஜரானாா்.