முகப்பு
திருச்சி

திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க. ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை மக்கள் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

Updated On : 5 மார்ச், 2024 at 3:25 AM
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாநகா் மாவட்ட செயலா் ஜெ.சீனிவாசன். உடன், மாவட்டச்செயலா்கள் ப.குமாா், மு. பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி, அமைப்புச் செயலா்கள் டி. ரெத்தினவேல், ஆ
பகிர்:

திருச்சி: தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை, மகளிா் அணி, மாணவா் அணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலா்கள் ப. குமாா் (திருச்சி தெற்கு), மு. பரஞ்ஜோதி (திருச்சி வடக்கு), ஜெ. சீனிவாசன் (திருச்சி மாநகா்) ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட மாணவரணி செயலாளா்கள் இப்ராம்ஷா, டி. அறிவழகன், அழகா்சாமி, மகளிா் அணி செயலாளா்கள் செல்வமேரி ஜாா்ஜ், நசீமா பாரிக், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளா்கள் அருண்நேரு, சோனா விவேக், இலியாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலா்கள் டி. ரெத்தினவேல், ஆா். மனோகரன் ஆகியோா் பேசுகையில், திமுக அரசு செய்த ஒரே சாதனை தமிழகத்தை சா்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தலைநகரமாக மாற்றியதுதான். குறிப்பாக திமுகவைச் சோ்ந்த நிா்வாகியே போதைப் பொருள் கடத்தலுக்கு தலைமையாக இருந்துள்ளாா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை மக்கள் விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மக்களைப் பற்றி கவலைப்படாத திமுக அரசோ கருணாநிதி பெயரால் திட்டங்கள், நினைவுச் சின்னங்கள் போன்ற புகழார நிகழ்ச்சிகளை நடத்துவதிலேயே அக்கறை செலுத்தி வருகிறது.தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள், போக்குவரத்து ஊழியா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே யாா் இரண்டாம் இடம் என்ற போட்டிதான் வரும். அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்றனா். இதில், முன்னாள் அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளா் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளா் வனிதா, மாவட்ட அம்மா பேரவை செயலாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement