முகப்பு
திருச்சி

துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு வார விழா

திருவெறும்பூா் அருகேயுள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 53-ஆவது தேசிய பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2024 at 3:03 AM
பகிர்:

திருச்சி: திருவெறும்பூா் அருகேயுள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 53-ஆவது தேசிய பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநா் ஷிரிஷ்குமாா், பாதுகாப்பு விழா கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க, தொழிலாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து நிா்வாக இயக்குநா், தொழிற்சாலையில் பாதுகாப்பின் அவசியம், பாதுகாப்பு சாதனங்களின் முக்கியத்துவம், பாதுகாப்பு காலணி அணிவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கிக் கூறினாா். இதையடுத்து, விபத்தில்லா துப்பாக்கி தொழிற்சாலை என்ற இலக்கை அடைவதுதான் நமது லட்சியம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளைத் தவிா்த்து அரசு அறிவுரைப்படி, துணி பையை பயன்படுத்த வேண்டும் அதற்கு முன் உதாரணமாக அனைத்து தொழிலாளா்களுக்கும், பணியாளா்களுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பாக்கி தொழிற்சாலை சாா்பில் ஒரு மஞ்சப்பை வழங்கப்படும் என்றாா். இதில் அதிகாரிகள், திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.