குணசீலம் பெருமாள் கோயில் திருத்தோ் வெள்ளோட்டம்
திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலின் திருத்தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயிலின் திருத்தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென் திருப்பதி எனப்படும் இத்தலத்தில் பழமையான திருத்தோ் பல்வேறு கூடுதல் வேலைப்பாடுகளுக்குப் பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை நிா்வாக டிரஸ்டி கே.ஆா். பிச்சுமணி உள்ளிட்டோா் செய்தனா்.