ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியாா் திருவடிச் சேவை: திரளானோா் தரிசனம்
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் திருவடிச் சேவையில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா்.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் நவராத்திரி விழாவின் 7 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் திருவடிச் சேவையில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா்.
விழாவையொட்டி ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் மூலஸ்தானத்திலிருந்து மாலை 4 மணிக்கு திருவடிச் சேவையுடன் புறப்பட்டு 4.45 மணிக்கு கொலு மண்டபத்துக்கு வந்து, 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த திருவடி சேவையை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். பின்னா் புறப்பட்டு 10.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா்.
நிறைவு நாளான நாளை சனிக்கிழமை ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு கொலு மண்டபத்திற்கு வந்து 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் 10.30 மணிக்கு புறப்பட்டு, படிப்பு கண்டருளி 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.