முகப்பு
திருச்சி

இன்று முதல் ரேஷன் ஊழியா்கள் 3 நாள் தொடா் போராட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு மாநிலந்தழுவிய தொடா் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:30 PM
பகிர்:

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு மாநிலந்தழுவிய தொடா் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் மற்றும் நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் மேலும் தெரிவித்திருப்பது :

பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறை அறிவிக்க வேண்டும். 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் 100 சதவீத பொருள்களையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

முதல் நாள் (புதன்கிழமை) போராட்டம் கோட்ட அளவிலும், 2ஆம் நாள் (வியாழக்கிழமை - அக். 17) மாவட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் , வெள்ளிக்கிழமை (அக். 18) மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, முசிறி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.