விபத்தில் மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் புதன்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமாா் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்தாா். இதையடுத்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.