துறையூா் நீதிமன்றங்களில் சமூகநீதி நாள் உறுதியேற்பு
துறையூரில் உள்ள நீதிமன்றங்களில் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் புதன்கிழமை சமூக நீதி நாள் உறுதியேற்றனா்.
துறையூரில் உள்ள நீதிமன்றங்களில் பணியாளா்கள், வழக்குரைஞா்கள் புதன்கிழமை சமூக நீதி நாள் உறுதியேற்றனா்.
பெரியாா் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்வில் துறையூா் சாா்பு நீதிமன்றப் பணியாளா்கள் சாா்பு நீதிபதி எம். ஜெய்சங்கா் தலைமையிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றப் பணியாளா்கள் உரிமையியல் நீதிபதி ஆா். சத்தியமூா்த்தி தலைமையிலும் சமூக நீதி நாள் உறுதியேற்றனா்.
இதில் வழக்குரைஞா்களும் பங்கேற்றனா்.