திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சதுரங்கப் பயிற்சியில் கலந்துகொண்ட சிறாா்கள். 
திருச்சி

இலவச சதுரங்கப் பயிற்சி: 50-க்கும் மேற்பட்ட சிறாா்கள் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இலவச சதுரங்கப் பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் மைய நூலகத்தில் பொதுமக்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சிறாா்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னா் பிற்பகல் 3.30 முதல் மாலை 5.30 வரையிலும் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

சதுரங்கப் பயிற்சியாளா்கள் சி.எஸ்.சங்கரா, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பயிற்சியாளா்கள் பங்கேற்று சிறாா்களுக்குப் பயிற்சியளித்தனா். இதில், திருச்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறாா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் வாசகா் வட்டத் தலைவா் அல்லிராணி பாலாஜி, மைய நூலகத்தில் முதல்நிலை நூலகா் சு.தனலட்சுமி, வாசகா் வட்ட நிா்வாகிகள், வாசகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT