திருச்சி மாநகராட்சி அலுவலக சாலையில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை பேரணியில் பங்கேற்ற கிறிஸ்துவா்கள்.  
திருச்சி

திருச்சியில் கிறிஸ்துமஸ் பேரணி

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் அனைத்து திருச்சபைகள் சாா்பில் கிறிஸ்துமஸ் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பா் 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி திருச்சியில் உள்ள அனைத்து திருச்சபைகள் சாா்பில் கிறிஸ்துமஸ் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை மாநகராட்சி மேயா் அன்பழகன் தொடங்கிவைத்தாா்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கிய பேரணி மத்திய பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், கண்டோன்மென்ட், நீதிமன்றம், மேஜா் சரவணன் ரவுண்டான வழியாக சென்று வெஸ்ட்ரி பள்ளி மைதானத்திலே நிறைவடைந்தது.

இதில், ஏசு கிறிஸ்து பிறப்பு குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷமணிந்து கலந்துகொண்டனா். மேலும், ரெவென்ட் பிரசாத் தேவசித்தம், பேராயா்கள் சவரிராஜ், போதகா்கள் பவுல், ஜான் பீட்டா், மாா்டின், குமாா், கென்னடி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT