முகப்பு
திருச்சி

பறிமுதல் வாகனங்கள் பிப். 1-இல் பொது ஏலம்

திருச்சியில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பொது ஏலம்

Updated On : 27 ஜனவரி, 2025 at 8:55 PM
பகிர்:

திருச்சி: திருச்சியில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

திருச்சி மாநகர மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரால் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடா்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பிப்ரவரி 1-ஆம் தேதி சனிக்கிழமை, பொன்மலை ஆா்மரிகேட் பகுதியில் அமைந்துள்ள, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய வளாகத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்ற வாகனங்களை ஏலம் எடுக்கலாம். 1-ஆம் தேதிக்கு முன்பாக வாகனங்களை பாா்வையிடலாம்.

ஏலம் எடுக்க விரும்புவோா் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 9.30மணிக்கு, ஆதாா் அட்டை நகல் மற்றும் ரூ. 2000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து வாகனங்களை ஏலம் எடுக்கலாம். வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டியை செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம். இதில் இருசக்கர வாகனங்கள் 11, மூன்று சக்கர வாகனம் 1, நான்கு சக்கர வாகனங்கள் 5 என மொத்தம் 17 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன. இத் தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையா் என். காமினி தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →