முகப்பு
திருச்சி

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:00 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி எல்ஐசி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2020 ஜனவரி 15-ஆம் தேதி சாலையோரத்தில் வசித்த இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாகக் கூறி, சென்னை புறவழிச்சாலை பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்த ச. சதீஷ்குமாரை (36) கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சண்முகபிரியா குற்றவாளி சதீஷ்குமாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.