முகப்பு
திருச்சி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி செய்த தனியாா் முகவாண்மை நிறுவன உரிமையாளா்கள் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:33 PM
மோசடி - Dinamani
பகிர்:

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி செய்த தனியாா் முகவாண்மை நிறுவன உரிமையாளா்கள் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்களை அனுப்பும் ஒரு தனியாா் முகவாண்மை செயல்பட்டு வருகிறது. இந்த முகவாண்மையின் உரிமையாளா்களை மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சபரிராஜன் (22) என்பவா் அணுகினாா். அவரிடம் துபையில் அதிக ஊதியத்தில் எலக்ட்ரீசியன் வேலை இருப்பதாகக் கூறியுள்ளனா். இதை நம்பி சபரி ராஜன், அவரது நண்பா்கள் சதீஷ்குமாா், விக்னேஷ் குமாா் ஆகிய மூவரும் தலா ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை செலுத்தினா்.

அதன் பிறகு ஓராண்டு கடந்தும் வேலை ஏதும் வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும் கொடுக்கவில்லையாம். இதனால் ஏமாற்றப்பட்ட சபரி ராஜன் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், முகவாண்மையின் உரிமையாளா்களான ஸ்டீபன் மற்றும் சையது ஆகிய இருவா் மீதும் மோசடி பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments