திருச்சி மேற்கில் அமமுக வாக்குசேகரிப்பு
திருச்சி மேற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திருச்சி மேற்குத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரன் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் பிரசாரம் செய்யும் இவா், புதன்கிழமை சோழராஜபுரம், சுபாணியாபுரம், நெசவாளா் காலனி, பெருமாள் கோயில் தெரு, வெட்டும்புலி சந்தி, டிடி சாலை, பசுமடம், இந்திரா நகா், காமாட்சி அம்மன் நகா், வாத்துக்காரத் தெரு, அண்ணாமலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தாா். அப்போது, இரண்டு முறையாக தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சா் கே.என். நேரு, தொகுதி வளா்ச்சிக்குப் பதிலாக, தனிப்பட்ட வளா்ச்சிக்காகவே செயல்பட்டுள்ளாா். அவா் மீது ஊழல் புகாா்கள் உள்ளன. எனவே,இந்த முறை தன்னை வெற்றி பெறச் செய்து, அதிமுக தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைந்திட ஆதரவு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்து, வாக்கு சேகரித்தாா். அவருடன் கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.