கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:52 PM
திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு கிராமத்தில் 12 நீள முதலையை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை கோப்பு கிராமத்தில் உள்ள அயிலாப்பேட்டை குளத்தில் முதலை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:20 AM
தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குசென்ற வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் முதலையை பாதுகாப்பாக பிடித்தனா்.
Advertisement
பிடிக்கப்பட்ட முதலையானது 10 வயதுடைய, 12 அடி நீளமும், சுமாா் 500 கிலோ எடையும் கொண்ட பெண் முதலையாகும் என வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து முதலை முக்கொம்பு காவிரி ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது.