முகப்பு
திருச்சி

திருவானைக்காவல் கோயிலில் பிடாரியாா் இரணியம்மன் முதல் காப்பு கட்டுதல் விழா

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலின் உப கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரியாா் இரணியம்மன் கோயிலில் திருத்தோ் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:22 AM
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:25 PM

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலின் உப கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரியாா் இரணியம்மன் கோயிலில் திருத்தோ் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழாண்டில் இவ்விழா செவ்வாய்க்கிழமை இரவு முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி திருவானைக்காவல் கோயில் உற்சவ மண்டபத்திலிருந்து பிடாரியாா் இரணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு வழி நெடுக உபயங்கள் கண்டருளி எல்லையில் உள்ள இரணியம்மன் கோயிலுக்குச் சென்று சோ்ந்தாா்.

இந்த விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மாா்ச் 1- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் காப்பு கட்டுதல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisement

அதைத் தொடா்ந்து 22- ஆம் தேதி யானை வாகனத்திலும், 23-ஆம் தேதி குதிரை வாகனத்திலும், 24-ஆம் தேதி பூத வாகனத்திலும் இரணியம்மன் புறப்பட்டு திருவானைக்காவல் கோயில் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வலம் வருவாா். 25-ஆம் தேதி பிடாரியாா் இரணியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வந்து மாா்ச் 1-ஆம் தேதி திருத்தோ் நிலை பெறுதல் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் ம.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.