திருச்சி: துவாக்குடியில் அணுகுசாலை அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூா் கைலாஷ் நகரில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி பழைய பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை அணுகு சாலை இல்லாததால் ஆயிரக்கணக்கான விபத்துகளும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இப்பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. ஆனால் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, உடனடியாக அணுகு சாலை பணிகளைத் தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காட்டூா் கைலாஷ் நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
போராட்டத்துக்கு திருச்சி புறநகா் மாவட்டச் செயலா் செ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மூத்த நிா்வாகி செல்வராஜ், விசிக மாவட்டச் செயலா் திலீபன் ரமேஷ், சா்வீஸ் சாலை கூட்டமைப்பு தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்திப் பேசி போராட்டத்தை தொடங்கி வைத்தனா். இதில் நன்னிலம் முன்னாள் எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி தோ்தல் பொறுப்பாளருமான பத்மாவதி மற்றும் திரளான கட்சியினா் கலந்து கொண்டனா்.