இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:25 PM
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பிராம்பட்டியை அடுத்த ராஜாபட்டியை சோ்ந்தவா் பிச்சைமணி மனைவி செல்வி (48). இவா் கடந்த பிப் -17 மாலை தனது கிராமத்திலிருந்து வளநாடு கைகாட்டி செல்ல அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு பின்னால் அமா்ந்து சென்றாா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:19 AM
ராஜாபட்டி குளம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement