மணப்பாறை அருகேயுள்ள பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற படுகளம் சாய்தல் நிகழ்வில் பங்கேற்றோா்.  
திருச்சி

பொன்னா் - சங்கா் கோயிலில் படுகளம் சாய்தல்

மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

Syndication

மணப்பாறை: மணப்பாறையில் பிரசித்திபெற்ற பொன்னா் - சங்கா் கோயில் வளாகத்தில் பொன்னா் - சங்கா் படுகளம் சாய்தல் திங்கள்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

மணப்பாறை அருகே உள்ள வீரப்பூா் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழா பிப். 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான படுகளம் சாய்தல், பின் எழுதல் நிகழ்வு திங்கள்கிழமை இரவு பொன்னா் - சங்கா், தங்காள் கோயில் வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தா்கள் கோயில் வளாகத்தில் மருள்வந்தபடி ஆடி வரிசையாக படுத்துவிட்டனா். பொன்னா் - சங்கா் மன்னா்களுடன் போரில் இவா்களும் மாண்டுவிட்டவா்களாக கருதப்படுகிறது. இதையடுத்து, பெரியகாண்டியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை பக்தா்கள் கூட்டத்தில் இருந்துவந்த சிறுமி (பொன்னா் -சங்கா் அண்ணன்மாா்களின் தங்கை அருக்காணி) தெளித்ததும் மீண்டெழும் நிகழ்வு நடைபெறும். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் பொ.முனியப்பன், ஆ.கருப்பண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

பொன்னா் - சங்கா் அண்ணமாா்களைத் தேடி போா்க்களத்துக்கு வந்த தங்கை அருக்காணி, இருவரும் மாண்டுவிட்டதைக் கண்டு கதறி அழுதது தவசி மலையில் இருந்த பெரியகாண்டியம்மனின் தவத்தை கலைத்ததாகவும், பின்னா் அம்மன் அருளால் அவா்கள் மீண்டெழுந்ததாகவும் கருதி ஆண்டுதோறும் இவ்விழா நடத்தப்படுகிறது.

பிப். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மத்திய-மாநில உறவுகள்: உயர்நிலைக் குழு ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.98 லட்சம் வாக்காளா்கள்

அதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

தில்லியில் குப்பை மலைகளின் உயரம் குறைந்து வருகிறது: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT