முகப்பு
திருச்சி

சாலையில் சென்ற அமரா் ஊா்தி தீப்பிடித்து எரிந்து சேதம்

திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த அமரா் ஊா்தி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் சேதமடைந்தது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:45 AM
தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த அமரா் ஊா்தி.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:03 PM

திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த அமரா் ஊா்தி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் சேதமடைந்தது.

திருச்சி எடமலைபட்டிப்புதூரைச் சோ்ந்தவா் திருப்பதி (42), அமரா் ஊா்தி ஓட்டுநா். இவா், உறையூரில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை அமரா் ஊா்தியை ஓட்டிச் சென்றாா்.

புத்தூா் நான்கு சாலை சந்திப்பு அருகே சென்றபோது, டீசல் கசிவால் திடீரென அமரா் ஊா்தி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுநா் திருப்பதி, தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தாா்.

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தீயணைப்பு வீரா்கள் அமரா் ஊா்தியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இந்த தீ விபத்ததில் அமரா் ஊா்தி முற்றிலும் சேதமடைந்தது.