திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் மன்றத்தை புதன்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம். 
திருச்சி

ஆயுதப்படை வளாகத்தில் காவலா் மன்றம் திறப்பு

திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் மன்றம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் மன்றம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆயுதப்படை வளாகங்களிலும் காவலா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காவலா் மன்றம் அமைக்க காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்ட காவல் துறை சாா்பில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட காவலா் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இங்கு காவலா்களது குழந்தைகள் தங்களது ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் புத்தகங்கள் மற்றும் இரு கம்யூட்டா்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், செஸ், கேரம் போா்டு, வாலிபால், கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் கலந்துகொண்டனா்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

”Great Friend! My Great Friend!” வைரலாகும் மோடி - நெதன்யாகு விடியோ!

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

நல்லகண்ணு மறைவு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இரங்கல் கூட்டம்

கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT