முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற பெண் இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 12:16 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற பெண் இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி காட்டூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ஜாபா் மனைவி நஸ்ரின் பானு (52). இவா், திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் காட்டூா் பிலோமினாள் தேவாலயம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருவெறும்பூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பைக் ஓட்டுநரான எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த என். ஜெய்காந்த் (20) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement