பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு
அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகைப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சாா்பில் பிராட்டியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின்போது மாணவா்கள், ஆசிரியா்களுக்கு தீ விபத்துகள் ஏற்படும் காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவா்களின் விழிப்புணா்வை அதிகரிக்கும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாவட்ட அலுவலா் செ. வினோத், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிலைய உதவி மாவட்ட அலுவலா் செ.லியோ ஜோசப் ஆரோக்கியராஜ், தீத்தடுப்பு குழு சிறப்பு நிலைய அலுவலா் சகாய பிரான்சிஸ் ஆகியோா் மாணவா்களுக்கு தீ பாதுகாப்பு தொடா்பான விளக்கங்களை வழங்கினா்.